வாழைப்பழக் கூழுக்குள் 1,000 கிலோ கொக்கைன்… பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

 

கொரோனா காலத்திலும் உலகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் விவகாரங்கள் தொடர்ந்த நடைபெற்று கொண்டே இருக்கிறது. பிரிட்டன் துறைமுகத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி 1,000 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய மதிப்பில் இது ரூ.1,000 கோடிக்கு விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த கொக்கைனை, கடத்தல் காரர்கள் வாழைப்பழக் கூழுக்குள் வைத்து கடத்தியதுதான் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருளான வாழைப்பழக் கூழுக்குள் வைத்து ஒரு டன்க்கும் அதிகமான கொக்கைன் போதைப் பொருள் கடத்தப்பட்டு இருக்கிறது. இது கொலம்பியாவில் இருந்து பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் பிரிட்டனில் இருந்து இந்தப் போதைப் பொருள்கள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரத்திற்கு செல்ல இருந்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில் பெல்ஜியத்திற்கு அனுப்பட இருந்தாலும் குறைந்த அளவில் கொக்கைன் பிரிட்டனிலும் விற்பனை செய்யப்படலாம் என்ற அச்சத்தை பிரிட்டன் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.

பிரிட்டனின் எல்லையில் இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,155 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில மாத இடைவெளியில் மீண்டும் ஒரு டன்னுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற கடத்தல் விவகாரங்கள் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஏலியன்கள் US உடன் ரகசிய ஒப்பந்தத்தில் இருக்கிறதா??? பதற வைக்கும் தகவலை வெளியிட்ட உயர் அதிகாரி!!!

வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மையா என்பது இன்னும் முடிவு செய்யமுடியாத விஷயமாக இருந்து வருகிறது.

தனுஷின் 3வது படமும் ரிலீசுக்கு தயார்: வைரலாகும் டுவீட்!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே.

யாராவது ஒருத்தரவாது எனக்கு சப்போர்ட் பண்ணிங்களா? ஷிவானியிடம் கண்ணீர் விட்ட பாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன், பாலாஜியை வறுத்தெடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சனம், பாலா மோதலின்போது

'அப்ப தொங்கு' நிஷாவை பழிக்கு பழிவாங்கும் அர்ச்சனா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவின் ஆத்திரத்தை கிளறும் வகையில் நிஷா கேள்வி கேட்டதால்

ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 300 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த பரிதாபம்… மர்மநோய் காரணமா???

ஆந்திர மாநிலத்தில் மர்மநோய் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது.