அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து: 10 குழந்தைகள் பரிதாப பலி

  • IndiaGlitz, [Saturday,January 09 2021]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா என்ற மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அந்த குழந்தைகளுக்கு தற்போது தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா என்ற மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரோடு தீயில் கருகி பலியாகியுள்ளனர்.

இந்த தீ விபத்து நேரிட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் பலியாகியுள்ள சோகச்சம்பவம் மகாராஷ்டிராவை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

'D43' படத்தின் டைட்டில் குறித்து தனுஷின் டுவீட்!

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' மற்றும் ஒரு பாலிவுட் திரைப்படம் என மூன்று திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு

இளம் நடிகரின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் திரையுலகில் வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

எப்போது மீண்டும் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக 7 மாதங்கள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில்

இந்த வாரம் ஒருவர் மட்டுமே எவிக்சன்: வெளியேறுபவர் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த கடைசி நாமினேசனில் வீட்டில் இருந்த அனைத்து ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் அல்லது இருவர் வெளியேற்றப்பட

டிக்கெட் டு பினாலே டாஸ்க்; 8 சுற்றுகளின் முடிவில் முதலிடம் இவருக்கா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் 'வாக்கியம் பொருத்துதல்' என்னும் டாஸ்க் முடிவுக்கு வந்தது.