கோவிட் -ஆல்  உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம்...! வடமாநில அரசு அறிவிப்பு...!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டத்திலும், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையத் துவங்கினாலும், தினசரி பாதிப்பு என்பது 2.5 லட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாகஅறிவித்துள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்,

இலவசக் கல்வி, இலவச ரேஷன் பொருட்கள், வட்டியில்லா கடன் உள்ளிட்டவை வழங்கப்படும் போன்றவற்றை கொரோனா முதல் அலையின் போது அறிவித்திருந்தார்.

அதேபோல் அரசு வேலையில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையுடன், ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3500 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப்பணி....!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதில், துப்பாக்கிச்சூடு அங்கு நடைபெற்றது.

ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணக்கூடாது? லாஸ்லியாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா என்பதும் அவர் தற்போது 'ஃபிரண்ட்ஸ்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நல்ல வேளை ஊசி தெரிகிற மாதிரி போட்டோ இருக்கு: ரம்யா பாண்டியன் தடுப்பூசி புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.

'வலிமை', 'இந்தியன் 2' குழந்தை நட்சத்திரத்தின் தாயார் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை ராயபுரத்தை சேர்ந்த முபாரக் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மனைவி 34 வயதான யாஸ்மின் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பலியான மற்றொரு திரையுலக பிரமுகர்!

தமிழகத்தை கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அப்பாவி பொது மக்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் பாதித்து வருகிறது என்பதும்