திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற மனைவி: அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

ஊத்தங்கரை அருகே ஒரு இளம்பெண் திருமணமாகி 15 நாட்களில் அழகான ஆண்குழந்தை பெற்றதால் மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஊத்தங்கரை அருகே உள்ள அஜீஸ் என்பவருக்கும் பர்வீன் பானு என்பவருக்கும் கடந்த 15 தினங்களுக்கு முன் திருமணம் ஆனது. திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வந்தது முதல் பர்வீன் பானு அடிக்கடி வயிற்றுவலி என்று கூறியதால் மாப்பிள்ளை வீட்டார் முதலிரவுக்க்கு கூட தேதி குறிக்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றிரவு பர்வீன் பானுவுக்கு திடீரென வயிற்றுவலி அதிகமானது. இதனையடுத்து பர்வீனை அஜிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பர்வீனை சோதனை செய்து அவர் நிறைமாத கர்ப்பிணி என்றும் இன்னும் சில மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்றும் கூறியதால் அஜிஸ் அதிர்ச்சி அடைந்தார். மருத்துவர்கள் சொன்னது போலவே குழந்தையும் சில நிமிடங்களில் பிறந்தது. ஆனால் அஜிஸ்தான் அதிர்ச்சியில் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்னரும் ஒன்பது மாத கர்ப்பிணியை மாப்பிள்ளை வீட்டார் கண்டுபிடிக்காமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளிக்கின்றது.

 

More News

திமுக, அதிமுகவை வம்புக்கிழுக்கும் சர்கார்' ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பேசிய ஒருசில கருத்துக்கள் தமிழக அரசியல்வாதிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது.

இன்று மாலை 6 மணிக்கு 'சர்கார்' படத்தின் அடுத்த டீசர் ரிலீஸ்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இĩ

ரசிகர் மன்றத்தின் மூலம் அரசியலில் ஜெயித்துவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனம்: ரஜினிகாந்த்

ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது

எனக்கே பாவமா இருக்குது: பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கஸ்தூரி

திரையுலகை பொருத்தவரையில் பாலியல் தொல்லை அனுபவம் பெறாத நடிகைகளே மிகவும் குறைவு என்று கூறலாம். ஒருசிலர் இதனை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி கொண்டுள்ளனர்.

ரஜினியுடன் நடித்த அனுபவம்: ஒரு இளம் நடிகையின் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதே சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு நடிகர், நடிகையின் வாழ்நாள் ஆசையாக இருக்கும். சிலருக்கு மிக எளிதிலும்,