30 ஆண்டுகள் செய்தி வாசித்த பிரபலம் காலமானார்: பொதுமக்கள் இரங்கல்

  • IndiaGlitz, [Sunday,August 14 2022]

அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசுவாமி காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரோஜ் நாராயணசுவாமி. அவரது கம்பீரக் குரலை கடந்த 1980ஆம் ஆண்டுகளில் இருந்து பலர் வானொலியில் கேட்டு இருப்பார்கள்.

’ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' என்ற குரல் பலருக்கு பரிட்சயம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்குரல் போல் இருந்தாலும் கணீர் குரலில் 30 ஆண்டுகள் செய்தி ஒலிபரப்புத் துறையில் பணியாற்றிய சரோஜ் நாராயணசுவாமிக்கு  தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரோஜ் நாராயணசுவாமி இன்று மும்பையில் தனது வீட்டில் காலமானார். அவருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்ற  சரோஜ் நாராயணசாமி  டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் கடந்த 1965-ஆம் ஆண்டில் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்து, சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் தனது கம்பீரமான, நேர்த்தியான உச்சரிப்பால் லட்சக்கணக்கான நேயர்களை பெற்றார். சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி கடந்த 1995ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது பூர்வீகம் தமிழகத்தை சேர்ந்த தஞ்சாவூர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'என்ன கொடுமை இது': நயன்தாரா கெட்டப் போட்ட பிக்பாஸ் நடிகை குறித்து விக்னேஷ் சிவன் கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கெட்டப்பில் இருக்கும் பிக்பாஸ் நடிகையின் புகைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த கமெண்ட்ஸ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க: விஜய் டிவி பிரபலத்தின் வீடியோ வைரல்!

 என்னை ரொம்ப கொடுமை கொடுமைப்படுத்துறாங்க என விஜய் டிவி பிரபலம் ஒருவர் கூறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பார்சிலோனா பறக்கும் முன் நயன்தாரா முடித்து கொடுத்த திரைப்படம் இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா நாட்டிற்கு சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

எனக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்பட கூடாது: மீனா எடுத்த அதிரடி முடிவு!

நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக

பெல்ஜியம் நாட்டில் ப்ரியா பவானிசங்கர்.. வேற லெவல் கிளாமர் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கர் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்பதும் அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை அவர் வெளியிட்டு