'காலா'வை விட 'மெர்சல்' தான் சிறந்த படம்: எஸ்.ஏ.சி கருத்துக்கு நெட்டிசன்கள் ரியாக்சன்

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது. அதேபோல் இந்த படத்தின் வசூலும் விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் படங்களில் 'காலா'வை விட 'மெர்சல்' படம் தான் சிறந்தது என்று கூறியுள்ளார். மேலும் விஜய்க்கு தன்னை விட நன்றாகவே அரசியல் தெரியும் என்றும் சமூக போராளியான டிராபிக் ராமசாமியை கோமாளி போன்று ஒருசிலர் சித்தரித்துள்ளதாகவும், தான் நடித்த டிராபிக் ராமசாமி திரைப்படம் வெளிவந்தவுடன் அந்த கருத்து மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'காலா' மற்றும் 'மெர்சல்' படத்தை ஒப்பிட்டுள்ள எஸ்.ஏ.சியின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களிள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் 'மெர்சல்' படத்தில் ஒருசில வசனங்களை தவிர அரசியலே இல்லை என்றும் அந்த படத்தை அரசியல் படம் என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் நடுநிலை விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

'இரும்புத்திரை'க்கு பாராட்டு தெரிவித்த சூப்பர் ஸ்டார் நடிகர்

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கிளாமராக நடிக்க மாட்டேன் எம்பிரான் பட நாயகி - ராதிகா ப்ரீத்தி

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்

விஜய்யை அடிமையாக்கிய வீடியோ கேம் எது தெரியுமா?

தளபதி விஜய்யின் பிறந்த நாள் இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

பிக்பாஸ் இல்லத்தில் மோதலின் தொடக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சிறுசிறு மோதல்கள் நடந்தாலும் அந்த மோதல் பெரிய அளவில் இல்லை. மும்தாஜை பார்த்து பொன்னம்பலம் 'மல மல என்ற பாட்டை பாடியது,

ஜிவி பிரகாஷ் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று சென்னை கடற்கரையை சுத்தம் செய்தனர்