கமல்ஹாசனை சந்தித்த கண்சிமிட்டல் நாயகி

  • IndiaGlitz, [Friday,May 25 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'ஒரு ஆதார் லவ்' என்ற மலையாள படத்தின் டீசரில் ஒரே ஒரு கண்சிமிட்டல் மற்றும் புருவ நடனம் மூலம் இந்தியா முழுவதும் டிரெண்டுக்கு வந்தவர் நடிகை பிரியா வாரியர். இந்த டீசரால் அவர் இந்திய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நிலையில் தற்போது மீண்டும் அவர் குறித்த ஒரு பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது.

சமீபத்தில் கமல்ஹாசன் கேரளாவில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது அவரை சந்தித்து கைகுலுக்கியுள்ளார் ப்ரியாவாரியார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவலை வெளியிட்டுள்ளார். ஒரே நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், மெகா ஸ்டார் மம்முட்டி மற்றும் எனது விருப்பத்திற்குரிய நாயகன் துல்கர் சல்மான் ஆகியோர்களை இந்த விழாவில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. இவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு ஒரே நாளில் நிறைவேறிய இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அதேபோல் விரைவில் மோகன்லால் அவர்களையும் சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று ப்ரியாவாரியர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ப்ரியாவாரியரின் இந்த பதிவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐபிஎல் இறுதி போட்டியில் '2.0' டிரைலர்?

ஐபிஎல் இறுதி போட்டியின் இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழர்கள் கிட்ட மோதாதே: சிம்பு எச்சரிக்கை

தூத்துகுடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்யாவின் மணமகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது என்பது அனைவரும் அறிந்ததே.

தூத்துகுடியில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை: கடைகள் திறப்பு, போக்குவரத்து ஆரம்பம்

தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் அம்மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பதட்ட நிலை இருந்தது.

விக்ரமை மீண்டும் பாட வைப்பாரா தேவிஸ்ரீ பிரசாத்

சீயான் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர் மற்றும் பாடகர் என்பது பலர் அறிந்ததே