close
Choose your channels

காவிரிக்காக போராடி மெரீனாவில் கைதானாவர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

Saturday, March 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களும், மாணவர்களூம், இளைஞர்களும் மத்திய அரசு மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதால் எந்த நேரத்திலும் மெரினாவில் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை சுமார் 30 பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து திடீரென காவிரி குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர். ஜல்லிக்கட்டு போராட்டமும் இப்படித்தான் குறைந்த அளவில் ஆரம்பித்து பின்னர் பிரமாண்டமாக மாறியது. இதனால் மீண்டும் ஒரு மெரினா போராட்டம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு விழிப்புடன் இருந்து வருகின்றனர்.

மேலும் சமூக வலைத்தளம் மூலம் இணைந்து போராட்டம் செய்த பெண்கள் உள்பட 30 பேர்களையும் கைது செய்த போலீசார் அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் உண்மையிலேயே சமூக வலைத்தளம் மூலம் இணைந்து போராட்டத்திற்கு வந்தவர்கள் தானா? அல்லது ஏதேனும் அமைப்பை சேர்ந்தவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.;

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment