காவிரிக்காக போராடி மெரீனாவில் கைதானாவர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களும், மாணவர்களூம், இளைஞர்களும் மத்திய அரசு மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதால் எந்த நேரத்திலும் மெரினாவில் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை சுமார் 30 பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து திடீரென காவிரி குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர். ஜல்லிக்கட்டு போராட்டமும் இப்படித்தான் குறைந்த அளவில் ஆரம்பித்து பின்னர் பிரமாண்டமாக மாறியது. இதனால் மீண்டும் ஒரு மெரினா போராட்டம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு விழிப்புடன் இருந்து வருகின்றனர்.

மேலும் சமூக வலைத்தளம் மூலம் இணைந்து போராட்டம் செய்த பெண்கள் உள்பட 30 பேர்களையும் கைது செய்த போலீசார் அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் உண்மையிலேயே சமூக வலைத்தளம் மூலம் இணைந்து போராட்டத்திற்கு வந்தவர்கள் தானா? அல்லது ஏதேனும் அமைப்பை சேர்ந்தவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.;

 

More News

சென்னையில் சிஎஸ்கே போட்டிகான டிக்கெட்டுக்கள் எப்போது கிடைக்கும்

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கவுள்ளதால்

கமல்ஹாசனை முந்தினார் சரத்குமார்

தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடி வருகின்றனர்.

ஐபிஎல் 2018: ப்ரித்தி ஜிந்தா கனவை நிறைவேற்றுவாரா அஸ்வின்?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு நெருங்கிவிட்டதை அடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணியும் போட்டியை எதிர்நோக்க தயாராகி வருகின்றது.

மீண்டும் மெரினாவில் போராட்டமா?

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனாவில் நடந்த இளைஞர்களின் போராட்டம் உலகமே வியக்க்கும் வகையில் நடந்தது. அனேகமாக தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் என்று இதனை கூறலாம்.

கால்கள் இழந்த காதலனை கைப்பிடித்த காதலி: இதுவல்லவோ உண்மை காதல்

காதலுக்கு கண்ணில்லை என்றும், காதல் உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்றும் சினிமாவில் தான் வசனம் பேசமுடியும், நடைமுறை வாழ்க்கைக்கு அது ஒத்துவராது என்று பலர் கூறுவதுண்டு