உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76

1942ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என வாழ்ந்தவர்.

இயற்பியல் ஆராய்ச்சிகள் மட்டுமின்றி எழுத்துத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்ட இவரது அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகிய இரண்டு முக்கிய ஆய்வுகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இளமைப்பருவத்திலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளான போதிலும் கணினி  வழியில் பிறருடன் தொடர்பு கொண்டு தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்

அறிவியல் குறிப்புகள் உட்பட இவர் எழுதிய பல புத்தகங்கள் உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கியது.  அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு.

இந்த நிலையில் நேற்றிரவு ஸ்டீபன் ஹாக்கிங் மரணம் அடைந்ததை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்

More News

நடிகை ஹன்சிகா மீது பகீர் புகார்

ஹன்சிகா மீது அவரது மேனேஜர் முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

10வது மாடியில் விஐபிக்கள், பரதேசி போல் நடுரோட்டில் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள்

கடந்த சில நாட்களாகவே காவல்துறையை சேர்ந்தவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து அனைவரையும் அதிர்ச்சி அளித்து வருகிறது.

விக்ரம் மகனுடன் மகள் நடிப்பது உண்மையா? கவுதமி விளக்கம்

சீயான் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கமல் கட்சியில் இணைகிறாரா தமிழிசை?

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

ஆதார் எண்ணை இணைக்க புதிய காலக்கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஆதார் எண்ணை, வங்கி எண், மொபைல் எண் உள்பட பல்வேறு ஆவணங்களில் இணைக்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன.