ஒரு வருஷமா கழிவறைக்குள் அடைக்கப்பட்ட பெண்… கணவனின் வெறிச்செயல்!!!

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

 

அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தகவலை அறிந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் அப்பெண்ணை மீட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் கொரோனா பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பதாகப் புள்ளி விரவங்கள் தெரிவிக்கின்றன. நமது இந்தியாவிலும் எப்போம் இல்லாத அளவிற்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் சொந்த கணவனே தனது மனைவியை ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் அடைத்து வைத்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரி ரஜினி குப்தா, “ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெண் கழிவறைக்குள் பூட்டப் பட்டிருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. நான் எனது குழுவுடன் அங்கு சென்றேன். நாங்கள் இங்கு வந்தபோது அது உண்மை என்று நாங்கள் கண்டறிந்தோம். பெண் பல நாட்களாக எதையும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது.

மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. நாங்கள் அவருடன் பேசினோம். அவர் நல்ல நிலையில் உள்ளவர் எனத் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் அவரை மீட்டு தலைமுடியைக் கழுவினோம். நாங்கள் போலீஸ் புகார் அளித்துள்ளோம். அதன்படி போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்” எனத் தெரிவித்து இருக்கிறார்.

More News

ரூ.6.50 லட்சம் சொத்து வரி: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்டிருந்த சொத்து வரியை குறைக்க வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்

எவன் அவன்? அர்ச்சனாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதாத போட்டியாளர் யாருமே இல்லை என்ற நிலையில் இன்று காலை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ஜே அர்ச்சனா,

மூன்றே மணி நேரத்தில் விண்வெளி பயணம்… விண்வெளித் துறையில் புதிய சாதனை!!

ரஷ்யா விண்கலம் ஒன்று நேற்று பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெறுமனே 3 மணி நேரத்தில் பயணித்து புதிய சாதனையைப் படைத்து இருக்கிறது

விளையாட்டில் சாதனை செய்தாலும் முரளிதரன் நம்பிக்கை துரோகி: விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்து

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் எப்போது இயங்கும்? வெளியான அறிவிப்பு!!!

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.