சாமியாராக மாறிவிட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2019]

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஓமக்குச்சி நரசிம்மன். 1946ஆம் ஆண்டு 'ஒளவையார்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் 'மாந்தோப்பு கிளியே, 'மீண்டும் கோகிலா', 'போக்கிரி ராஜா,' சம்சாரம் அது மின்சாரம், 'ஜெண்டில்மேன்', ''இந்தியன்' என ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் தொண்டை புற்றுநோய் காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டு ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார். அவர் நடித்த கடைசி படம் 'தலைநகரம்'. ஓமக்குச்சி நரசிம்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் ஒரு மகனும் உண்டு. மகன் பெயர் ஓம் காமேஷ்வரன்.

இந்த நிலையில் ஓம்காமேஷ்வரன் தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். இயேசு, சாய்பாபா உள்பட பலரை நேரில் பார்த்துள்ளதாகவும், அதனால்தான் சாமியாராக மாறிவிட்டதாகவும் இவர் கூறி வருகிறார். தற்போது இவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு: கைது செய்யப்படுவாரா?

இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவக்குறிச்சியில் இன்று கமல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கர் செய்த புதிய முயற்சி!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' திரைப்படம் முதலில் லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.

பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து குதித்த ஜிஎஸ்டி கண்காணிப்பாளர்!

மும்பை பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கமல் மீது டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு: கிரிமினல் நடவடிக்கை எடுக்க மனு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலைக்கு 996, உடலுறவுக்கு 669: அலிபாபா நிறுவனரின் ஐடியா!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்று அலிபாபா. சீன தொழிலதிபர் ஜாக் மா நிறுவனராக உள்ள இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு அபார வளர்ச்சியை பெற்று வருகிறது