தேர்தல் களத்துக்கு தயாராகி வரும் அஇஅதிமுக… விறுவிறுப்பான பணிகளால் உற்சாகம்!!!

 

தமிழகத்தில் அடுத்த மே மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் புதிதாக ஐந்து குழுக்களை உருவாக்கி தேர்தல் களத்துக்கு விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது அதிமுக. இதற்காக அஇஅதிமுக சார்பில் 11 பேர் கொண்ட அறிக்கை தயாரிப்பு குழுவும், 3 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவும், ஊடக சந்திப்புகளுக்கு 7 பேர் கொண்ட குழுவும், எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளிக்க 9 பேர் கொண்ட குழுவும், ஊடக ஒருங்கிணைப்புக்கு 3 பேர் கொண்ட குழுவும் என அனைத்துக் குழுக்களும் புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்க்கொள்ள அதிமுக 11 பேர் கொண்ட அறிக்கை குழு உட்பட 5 தேர்தல் குழுக்களை உருவாக்கி உள்ளது. அஇஅதிமுக தன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களையும் சேர்த்து 11 பேர் கொண்ட அறிக்கை குழுவை கட்டமைத்துள்ளது. இதை தவிர்த்து எதிர்க்கட்சியின் புகார்களுக்கு பதில் அளிக்கவும் ஊடக ஒருங்கிணைப்பிற்கும் தனித்தனி குழுக்களை உருவாக்கி இருக்கிறது.

மேலும் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளுக்காக அனைத்துத் தொகுதிகளையும் 30 மண்டலங்களாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்களையும் அஇஅதிமுக தலைமை நியமித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக செயல் ஆற்றி வருவதால் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான அரசியல் ஆர்வலர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

More News

என்னுடைய சூப்பர் ஹீரோ உங்கள் தந்தை தான்: நடிகைக்கு நன்றி கூறிய சூர்யா!

சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ள

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இன்னொரு படமும் ரெடி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பதும், அதில் ஒரு சில படங்களின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவுக்கு

ஜீஸஸ் என் ஃப்ரெண்டு தான், எண்ணெயில போட்டு பொரிச்சிடுவேன்: மூக்குத்தி அம்மன் ஸ்னீக்பீக்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நாளை தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

காலையில் சிம்பு, மாலையில் ஜெய்: சுசீந்திரனின் தீபாவளி திட்டம்!

மிக குறுகிய காலத்தில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன் என்பதும் குறிப்பாக அவர் சிம்புவை வைத்தே 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தை 40 நாட்களில் முடித்து சாதனை செய்தவர்

சூர்யா அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது: வைகைப்புயல் வடிவேலு!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் தீபாவளி விருந்தாக சூர்யா ரசிகர்களுக்கு நேற்று ரிலீசான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் ஆகியோர்