ரஜினி தனது நிலையை மாற்றி கொள்வார்: முக ஸ்டாலின் நம்பிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சிஏஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து கருத்து கூறிய போது ’இந்த சட்டங்கள் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும், சிஏஏ சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும், ஒருவேளை இந்த சட்டத்தால் முஸ்லீம்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் முதல் நபராக நானே குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்

ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஒரு சிலர் மற்றும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் சிஐஏ கருத்து குறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’சிஏஏ சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை உரிய முறையில் ஆராய்ந்து ரஜினிகாந்த் பேச வேண்டும் என்றும் சிஏஏ குறித்து தெரிந்து கொண்டால் தனது நிலைப்பாட்டை ரஜினிகாந்த் மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்

முக ஸ்டாலின் கூறியபடியே சிஏஏ குறித்த தனது கருத்தை ரஜினிகாந்த் மாற்றிக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்