பெய்ரூட்டில் குண்டு வெடித்த ஒருசில நிமிடங்களில் காயத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர்: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

சமீபத்தில் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த குடோன் திடீரென வெடித்ததில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நொறுங்கியது மட்டுமின்றி இதில் பலர் உயிரிழந்தனர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் பெய்ரூட் முழுவதும் பெரும் பதட்டத்தில் இருந்தது.

இந்த நிலையில் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடிகுண்டு சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை முழுவதுமே கிட்டத்தட்ட இடிந்து சிதிலம் அடைந்து கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தது. ஆனால் அந்த இக்கட்டான இடத்திலும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்தார்.

அமோனியம் நைட்ரேட் வெடிகுண்டால் டாக்டருக்கும் முகமும் உடம்பின் பல பகுதிகளில் காயமேற்பட்டு ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த போதிலும் அவர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிரசவம் பார்த்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும், அந்த கர்ப்பிணியையும் குழந்தையையும் காப்பாற்றிய அந்த டாக்டருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மும்பையில் 7 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் யார்? பரபரப்பு தகவல்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னர் மும்பையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்றும் இதனையடுத்து மேற்கு மும்பையில் உள்ள துள்சி பைப்

இளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா?

இளம் நடிகர் ஒருவரின் மடியில் உட்கார்ந்து பிக்பாஸ் தமிழ் நடிகை ஒருவர் பியானோ வாசிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது 

அண்ணன் முறை வாலிபருடன் மகள் உறவு: அவமானத்தில் தூக்கில் தொங்கிய பெற்றோர்

தங்களுடைய மகள் அண்ணன் முறை உள்ள வாலிபர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டதை கண்டித்து பார்த்தும் அவர் கேட்காததால் அவமானத்தில் அவருடைய பெற்றோர்கள் தூக்கில் தொங்கிய

மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி நடுரோட்டில் மரணம்: என்ன நடந்தது?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில்

இந்தோனேசியாவில் 400 ஆண்டு பழமையான எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கரம்!!!

இந்தோனசியாவில் 100 க்கும் மேற்பட்ட ஆபத்தான எரிமலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.