சென்னையில் கேரள போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

சென்னை விருகம்பாகத்தில் கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மீது ஏராளமானோர் காவல்துறையினர்களிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மகாராஜாவிடம் விசாரணை நடத்த போலீசார் முயன்றபோது அவர் சென்னைக்கு தப்பிவந்துவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து சென்னை வந்த கேரள போலீசார் மகாராஜாவை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால் மகாராஜா உறவினர்கள் அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை மிரட்ட கேரள போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர். அதன்பின்னர் மகாராஜாவை கேரள போலீசார் அழைத்து சென்றனர். கேரள போலீசார் வானத்தை நோக்கி சுட்டது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

சிம்புவின் வெறித்தனமான ரசிகர் எடுத்த ரிஸ்க்

கோலிவுட் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்கள் குறைந்தது வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து தங்கள் ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளனர்.

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து வருவது விஜய்சேதுபதியும், ஜிவி பிரகாஷூம்தான்.

அரசியலிலும் விருதினை குவிக்கும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இதுவரை 'மூன்றாம் பிறை', 'நாயகன்' மற்றும் 'இந்தியன்' ஆகிய மூன்று படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி

பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் நேற்றிரவுடன் வாக்குப்பதிவு செய்யும் முறை முடிந்துவிட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2 ஆம் வாரத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.