விலை குறைப்புக்குப் பதிலாக, கலால் வரியை உயர்த்திய மேதைகள்!!! ராகுல்காந்தி விமர்சனம் 

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]


மத்தியப் பிரதேச மாநிலத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் அக்கட்சியின் ஆட்சி கேள்வி குறியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட இந்த குழப்பமான சூழ்நிலைக்கு பா.ஜ.க தான் காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், கடந்த மார்ச் 12 ஆம் தேதி மத்தியப் பிரதேச ஆட்சி சீர்குலைவுக்கு பா.ஜ.க தான் முழு காரணம் எனறு ராகுல் காந்தி நேரடியாகவே குற்றம் சாட்டினார். 

அது குறித்து, “காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கலைக்கும் வேலையில் நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும் நேரத்தில், சர்வதேச கச்சா பொருட்களின் விலையில் 35% சரிவு ஏற்பட்டு இருக்கிறது. பிரதமர் அதைக் கவனிக்கத் தவறிவிட்டார். இந்த விலை சரிவை பயன்படுத்திக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையில் ரூ.60 ஐ குறைத்து நாட்டு மக்களுக்கு பயன் விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார். 

அந்த டிவிட்டை தொடர்ந்து தற்போது ராகுல்காந்தி இன்னொரு டிவிட்டையும் தட்டி விட்டு இருக்கிறார். அதில் “நான் 3 நாட்களுக்கு முன்பு நான் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். சர்வதேச கச்சா பொருட்களின் விலை சரிவை இந்திய நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வழிசெய்ய வேண்டும் என ஆலோசனை கூறியிருந்தேன். அதை ஏற்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி இருக்கிறார்கள் எங்கள் மேதைகள்” என்று ராகுல் காந்தி கிண்டலாக விமர்சித்து உள்ளார். 

சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப் பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 3 அதிகரித்து உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 
 

 

More News

மாஸ்டர் ஆடியோ விழாவில் 'தல' குறித்து 'தளபதி' பேசியது என்ன?

இன்று விஜய்யின் 'மாஸ்டர்' ஆடியோ விழாவில் கலந்து கொள்ள வந்த விஜய், கோட், சூட் அணிந்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'என்னுடைய காஸ்டியூம் டிசைனர்

மாஸ்டர்' ஆடியோ விழாவில் விஜய் கூறிய குட்டிக்கதை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கூறிய குட்டிக்கதை குறித்து தற்போது பார்ப்போம்: அவர் கூறியதாவது

விஜய்சேதுபதி நினைத்தால் இந்த படத்தை தவிர்த்து இருக்கலாம்: விஜய் 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி குறித்து தளபதி விஜய் பேசியதாவது:

மாஸ்டர் விழவை நான் அரைமனதுடன் தான் ஒப்புக்கொண்டேன்: விஜய்

அனைவரும் எதிர்பார்த்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய் பேசிய மாஸ் பேச்சை தற்போது பார்ப்போம்:

நான் விஜய்சேதுபதிக்கு கதையே சொல்லவில்லை: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதாவது: