இவருடைய பந்தை எதிர்க்கொள்ள நான் ரொம்பவே சிரமப்பட்டேன் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!!

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக விளங்கும் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஒரு சுவாரசியமான கருத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இவர் வேகப்பந்துகளை மிகவும் அசால்ட்டாக சமாளிக்கும் திறமைக் கொண்டவர் என்பதால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இவரிடம் படாதபாடு பட வேண்டியிருக்கும். நேரம், காலம், இடமெல்லாம் இவருக்கு பெரிய விஷயமே கிடையாது. எந்த நாட்டிலும் எந்த களத்திலும் அசராது விளையாடும் திறமையுடையவர்.

கொரோனா காலத்தில் இவரிடம் இணையத்தின் வாயிலாக ரசிகர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அப்படி எழுப்பப்பட்ட ஒரு கேள்வி “நீங்கள் யாருடைய பந்தை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டீர்கள்?” என்பது. அதற்கு அவர் அளித்த பதில், பாகிஸ்தான் வேகப்பந்து விச்சாளர் முகமது அமிர் என்பது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் முகமது அமிர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். வேகப்பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை சாலியான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மேட்ச் பிட்சிங்கில் ஈடுபட்டதாகக்குற்றம் சாட்டப் பட்டார். அதனால் 5 வருடங்கள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

மீண்டும் விளையாட தொடங்கிய இவர் 38 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும் 2017 இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடி இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

என்னை தமிழக முதல்வர் ஆக்குங்கள்: ஒரே வாரத்தில் நிலைமையை சரிசெய்கிறேன்: மீராமிதுன் சவால்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வருக்கு சேரன் கூறிய ஐடியா

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது. நேற்று ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா நோய் பாதிப்பு அடைந்தவர்கள் இருந்ததால்

கொரோனாவால் மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி

சென்னை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது முக்கிய பதவியில் உள்ளவர்களும்

சீன எல்லையில் மோதல் ஏற்படக் காரணம் என்ன??? இருதரப்புகள் கூறும் விளக்கம்!!!

கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறுகிறது. அதற்கு எதிராக இந்தியா தனது