நான் இதை எதிர்பார்க்கவே இல்லை: ரஜினி குறித்து அனுஷ்கா

  • IndiaGlitz, [Friday,February 02 2018]

நடிகை அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பாகமதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தின் குழுவினர்களுக்கு குறிப்பாக நாயகி அனுஷ்காவுக்கு பத்திரிகைகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்காவுக்கு போன் செய்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய அனுஷ்கா, 'சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளேன். இதுவரை நான் பெற்ற பாராட்டுக்களிலேயே மிகச்சிறந்தது இதுதான்' என்று கூறினார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'லிங்கா' படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

இசைஞானியை இளம் அரசியல் தலைவர் சந்தித்தது ஏன் தெரியுமா?

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமீபத்தில் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து இந்த விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சீனாவில் இரண்டே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்த இந்திய திரைப்படம்

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்தது.

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

மீண்டும் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தீவிர அரசியலில் இறங்கி 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார்

ஓவியாவின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த முன்னணி நடிகர்

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான களவாணி படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா, அதன்பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தபோதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியால் உலக தமிழர்களிடையே பெரும்புகழ் பெற்றார்.