டி20 போட்டிகளில் முதல் முறையாக ஒருவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!!!

 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான டுவெய்ன் பிராவோ டி20 போட்டிகளில் முதல் முறையாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 36 வயதான டுவெய்ன் பிராவோ டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கரீபியன் தீவுகளில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக் (சி.பிஎல்) 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைட்ர்ஸ் அணிக்காக பிராவோ விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டிரின்பாகோ வீரர் டுவெய்ன் பிராவோ வீசிய பந்தில் லூக்கா அணியின் கார்ன்வெல் போல்ட் ஆகி வெளியேறினார். அவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றிருக்கிறார்.

மேலும் கரிபியன் பிரீமியர் லீக்கில் முதல் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையும் இவரையே சேரும். அதைத்தவிர டி20 போட்டிகளில் இதுவரை யாரும் 400 விக்கெட்டுகளைத் தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக இலங்கை வீரர் லசித் மலிங்கா டி20 போட்டிகளில் 390 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நம்ம கேப்டன் விராட் கோலி வீட்டில் விஷேசம்… டிவிட்டரில் தகவல்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது டிவிட்டர் பதிவில் “நாங்கள் இனிமேல் 3 பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது” என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்து இருக்கிறார்.

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண்: தனிமைப்படுத்தப்பட்ட ஓட்டலில் தற்கொலை

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தும் காலத்திற்காக சென்னை ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தியேட்டரை திறந்துவிட்டு டாஸ்மாக்கை மூடுங்க: அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் நடிகர்

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் 'தியேட்டரை திறந்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்' என அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

எஸ்பிபிக்கு பிசியோதெரபி சிகிச்சை: எஸ்.பி.பி. சரணின் புதிய வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் இவர்தான்… ஃபோர்ப்ஸ் வெளியிட்ட சுவாரசியத் தகவல்!!!

உலகப் பிரபலங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் பட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது.