புதிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் "குரங்கு-பி" வைரஸ்…. அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துபோய் இருக்கிறது. இந்நிலையில் சீனாவில் குரங்கு-பி வைரஸ் எனும் புதிய வைரஸ் நோய் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதையடுத்து சீன நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் நாடு முழுவதும் கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் வசித்துவந்த கால்நடை மருத்துவர் ஒருவருக்கு குரங்கு-பி எனும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் தற்போது உயிரிழந்து இருக்கிறார். 53 வயதாகும் அந்த கால்நடை மருத்துவர் கடந்த மார்ச் மாதம் 2 குரங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்தார் என்றும் இதையடுத்து கடந்த மே மாதம் முதல் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவர் கடந்த மே 27 ஆம் தேதி உயிரிழந்து விட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவரின் இறப்புக்கு காரணம் எதுவும் தெரியாத நிலையில் அவருடைய சளி மற்றும் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இதையடுத்து உயிரிழந்த மருத்துவருக்கு குரங்கு-பி எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

சீனாவில் கடந்த 1932 ஆம் வருடத்தில் மகாக்கஸ் எனும் குரங்கு வகைகளிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்தான் குரங்கு-பி என்பது. ஆனால் இந்த வைரஸ்களினால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் தற்போது மருத்துவர் ஒருவர் இந்த வைரஸ்க்கு பலியாகி உள்ளனர்.

அறிகுறிகள்-

குரங்கு-பி எனும் வைரஸ் 70-80% அளவிற்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இந்த வைரஸ் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது 1-3 வாரங்களில் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்புமண்டலப் பாதிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். மேலும் பாதிப்பை ஏற்படுத்திய நபரின் மத்திய நரம்பு மண்டலப் பகுதிகளில் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி விரைவில் இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குரங்குகளின் நேரடி கழிவுகள் மற்றும் அதன் சுரப்பிகளில் இருந்து இந்த வைரஸ் நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் குரங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், பூங்கா ஊழியர்கள் என அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மேலும் குரங்குகளிடம் நெருங்கி இருக்க வேண்டாம் என்றும் அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
 

More News

தம்பதிகளுக்கு..... உடலுறவில் கூடுதல் சுவாரசியம் தரும் விஷயங்கள் என்னென்ன....?

உடலுறவு என்பது மனிதர்கள் தங்களின் உடல் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும்,

பண்ணை வீட்டில் இரவு பார்ட்டி: சென்னையில் 'காதலன்' பட நடிகையிடம் விசாரணை

சென்னை அருகே உள்ள பண்ணை வீடு ஒன்றில் இரவு பார்ட்டி நடத்திய 'காதலன்' படத்தில் நடித்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது: காரணம் இதுதான்

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் நேற்று இரவு திடீரென மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதிமுக மதுசூதனன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி...!

அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் அவர்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றது.

ஆல்கஹால் இல்லாத பீர் வகைகள் உடலுக்கு நல்லதா? அதன் நன்மைகள் என்ன?

மது என்றாலே உடலுக்கு கெடுதி என்றுதான் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஆல்கஹால்