டீ கடையில் நின்று தம் அடிக்கும் சிறுவர்களே உஷார்… எச்சரிக்கும் புது சட்டம்!!!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

 

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை மத்திய அரசு அதிரடியாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மசோதாவில் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட இடங்களில் நின்று புகைப்பிடிப்பவர்களுக்கான அபராதம் ரூ.200 இல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 இல் இருந்து 21 ஆக உயருகிறது. இதுதொடர்பாக புதிய மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தயார் செய்து இருக்கிறது. இதில் 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு யாரும் சிகரெட் அல்லது பிற புகையிலைப் பொருட்களை விற்கவோ வாங்கவோ கூடாது. மேலும் கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் குறைந்தது 100 மீட்டருக்கு அப்பால் தான் புகையிலைப் பொருட்களை விற்கவும் அனுமதிக்கப்படும் .

மேலும் இதுபோன்ற பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்துதான் விறக் வேண்டும் என்ற விதியும் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதனால் சில்லறை விற்பனைக்கு அனுமதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறி செயல்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் இதே தவறை செய்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடித்தால் விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

More News

பிரபலத் தொழில் அதிபர் ஜாக் மா காணவில்லையா??? பரபரப்பு தகவல்!!!

பிரபலத் தொழில் அதிபரும், அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா காணாமல் போய்விட்டார் என்ற பரபரப்பு தகவலை தற்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன

முதல்வருக்கு நன்றி கூறி 'மாங்கல்யம் தந்துனானே' பாடிய சிம்பு!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே தளபதி விஜய் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில்

உங்களை யாரு தியேட்டருக்கு போக சொன்னது? கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி!

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இன்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது

அவுட் ஆன ஆரி: இறுதி போட்டியில் நுழைந்த பாலாஜி?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இறுதிப்போட்டிக்கு ஒரு நபர் நுழைவதற்கான டாஸ்க் ஒன்று வைக்கப்படுகிறது.

நடைமுறைக்கு வந்த ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வரை வாழ்த்தும் மக்கள்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,5000 ரொக்கம் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.