close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாய்ப்புகளை இழந்து வரும் மீராமிதுன்

Thursday, October 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் புகழ் பெறலாம், கோலிவுட் வாய்ப்புகள் குவியும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் கூறுவதுண்டு. ஆனால் பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ், ரித்விகா ஆகியோர்களுக்கு இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகட்டிவ் இமேஜ் பெற்ற நடிகை மீராமிதுன், கிடைத்த வாய்ப்புகளையும் இழந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் கிடைத்த வாய்ப்பினை இழந்த மீராமிதுன், தற்போது ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கி வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவர் நடிக்க இருந்த கேரக்டரில் தான் தற்போது கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’அக்னி சிறகுகள்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை மீரா மிதுன் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மீது அவர் சுமத்திய வீண்பழி, வெளியே வந்தவுடன் முகின்மீது பழி சுமத்த முயன்றதாக வெளிவந்த ஆடியோ ஆகியவை அவரது நெகட்டிவ் இமேஜூக்கு காரணமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.