பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாய்ப்புகளை இழந்து வரும் மீராமிதுன்

  • IndiaGlitz, [Thursday,October 10 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் புகழ் பெறலாம், கோலிவுட் வாய்ப்புகள் குவியும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் கூறுவதுண்டு. ஆனால் பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ், ரித்விகா ஆகியோர்களுக்கு இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகட்டிவ் இமேஜ் பெற்ற நடிகை மீராமிதுன், கிடைத்த வாய்ப்புகளையும் இழந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் கிடைத்த வாய்ப்பினை இழந்த மீராமிதுன், தற்போது ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கி வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவர் நடிக்க இருந்த கேரக்டரில் தான் தற்போது கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’அக்னி சிறகுகள்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை மீரா மிதுன் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மீது அவர் சுமத்திய வீண்பழி, வெளியே வந்தவுடன் முகின்மீது பழி சுமத்த முயன்றதாக வெளிவந்த ஆடியோ ஆகியவை அவரது நெகட்டிவ் இமேஜூக்கு காரணமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

'என்னை அறிந்தால்', செக்க சிவந்த வானம்' தடம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய், தற்போது 'அக்னி சிறகுகள்', பாக்ஸர்'மற்றும் மாபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

'மிக மிக அவசரம்' ரிலீஸில் திடீர் மாற்றம்

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் நாளை வெளியாக திட்டமிடப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'காலா' வில்லன்!

ஜெயம்ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது

மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு: பீகார் போலீஸின் அதிரடி முடிவு

மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய சமீபத்தில் பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்

தங்கர்பச்சான் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் அவர்கள் தனது மகனை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும்