ரஷ்யா தீவுகளில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!! சிறிய சுனாமி அலைகள்!!!

  • IndiaGlitz, [Wednesday,March 25 2020]


இன்று காலை ரஷ்யாவின் குரில் தீவுகளில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதையடுத்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. பாதிப்புகள் இல்லாததால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்ப பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜப்பான் நகரமான சப்போரோவிலிருந்து வடகிழக்கில் 1,400 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஆரம்பத்தில் நிலநடுக்கம் 1000 கி.மீ தூரத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து இருந்தது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மிகச் சிறிய சுனாமி அலைகள் மட்டுமே உருவானது. மேலும் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஹவாய், ஜப்பான், ரஷ்யா மற்றும் பசிபிக் தீவுகள், வடக்கு மரியானாஸ் மற்றும் வேக் தீவு போன்ற கடற்கரை பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஜப்பானில் வானிலை ஆய்வு அதிகாரிகள் எந்த எச்சரிக்கையையும் அறிவிக்கவில்லை. அவர்கள் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தனர். ஹவாய் பகுதிகளில் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

ரஷ்யத் தீவுகளை ஒட்டியப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட இருப்பதைக் கணித்த ஆராய்ச்சியாளர்கள் சுனாமியாக இருக்கலாம் என சந்தேகித்தனர். அதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் சிறிய சுனாமி அலைகள் மட்டுமே ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெற்றப்பட்டது.
 

More News

பெப்சி தொழிலாளர்களுக்கு 100 மூட்டை அரிசி கொடுத்த பிரபல நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்களான பெப்சி தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வருமானமின்றி

'தல' வீட்ல இருக்காரு, நீங்களும் வீட்ல இருங்க: திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து, தங்களை தாங்களே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வது

ஊரடங்கு உத்தரவிற்கு பின்னரும் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

உலகமெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் சுமார் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி விட்டது.

வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றுங்கள்: பிரபல நடிகை வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும் நேற்று நடிகை வரலட்சுமி ஒரு வீடியோ பதிவு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

கொரோனாவில் இருந்து தப்பிக்க எஸ்வி சேகர் கூறிய ஐடியா

கொரோனா வைரஸ் உலகில் உள்ள மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் உலக நாடுகளின் அரசுகள் திணறி வருகின்றன